தொடர்புடைய செய்திகள்
- திமுக மட்டும்தான் புத்திசாலியான கட்சின்னு நினைக்காதீங்க! – உச்சநீதிமன்றம் காட்டம்!
- 17 மாவட்டங்களில் இன்று கனமழை - விவரம் உள்ளே!!
- பிரச்சினை எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க! – எடப்பாடியாருக்கு முதல்வர் கடிதம்!
- 51 கோடி காலி மதுப்பாட்டில்களை திரும்ப பெறுவது கஷ்டம்! – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு!
- வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமத்திற்கான கட்டணங்கள் உயர்வு! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
கொங்கு முதல் டெல்டா வரை… காத்திருக்குது கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 13 மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன.
மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வான்லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
