வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (19:56 IST)

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நீட் எனப்படும் நுழைவுத்தேர்வுகளில்
தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவபடிப்பில் மாணவரகள் சேர முடியும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேர பொதுநுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இணையதளம் வழியிலாக ஆன்லைன் மூலமாகவும் வருகிற 30 ஆம்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வுக் கட்டணமாக எஸ்.சி.,எஸ்.டி.பிரிவினர் 750 ரூபாயும்,ஓ.பி.ஸி பிரிவினர் 1400 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
வருகிற மே மாதம் 5 ஆம் தேதியன்று இத்தேர்வு நடைபெறவுள்ளது.மேலும் சென்னை ,வேலூர்,நாகர்கோவில்நாமக்கல்,தஞ்சை,திருவள்ளூர்,,சேலம்,கோவை,கடலூர்,காஞ்சிபுரம்,கரூர்,திருச்சி,ஆகிய இடங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.