வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (19:24 IST)

செந்தில்கணேஷ், ராஜலக்ஷ்மியுடன் ஒரு சிறப்பு நேரலை - வெப்துனியா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மக்கள் இசை கலைஞன் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர், எங்கள் வெப்துனியாவில் பங்கேற்று நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்த உள்ளனர். 
 
பிரபல தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானவர்கள்  செந்தில் கணேஷ், ராஜலட்சுமி  தம்பதியினர். இவர்களுடைய சிறப்பே கிராமிய பாடல்கள்தான்.
 
 இவர்கள் பாடிய அத்தனை  பாடல்ககளும் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றது. நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை எடுத்து பாடலாக பாடியது அனைவரையும் கவர்ந்தது.
 
இந்நிலையில் அந்த தம்பதியினர் எங்கள் வெப்துனியாவில் பங்கேற்று தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்றதை பற்றியும் தெரிவிக்கவுள்ளனர். மேலும்,  நாட்டுப்புற பாடல்களை பாடியும்  சிறப்பிக்கவுள்ளனர். அந்த நிகழ்ச்சியை நேரலையாக நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.