தொடர்புடைய செய்திகள்
- சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? இன்னும் முடிவு செய்யவில்லை என கலெக்டர் தகவல்
- அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு
- சென்னை கனமழை எதிரொலி: மாநில கல்லூரி, சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
- கருணாநிதி இல்லத்தில் புகுந்த மழை நீர்: அமைச்சர் சொல்வது என்ன?
- அண்ணா பல்கலை தேர்வு ஒத்தி வைப்பு: மாணவர்கள் கோரிக்கை ஏற்பு
தொடர் கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பேய்மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னையின் புறநகர் பகுதி உள்பட பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மேலும் குடியிருப்புகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றிரவும், இன்று அதிகாலை முதலும் சென்னையின் பல பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். அதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை நேரங்களில் விடப்பட்ட விடுமுறைகளை ஈடுகட்ட வரும் நாட்களில் சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
