1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN to have rain for next 4 days

நாளை முதல் 13 ஆம் தேதி வரை மழை தானாம்!!

தமிழகம்
நாளை முதல் 13 ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல். 

 
இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகிய தகவலில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 13 ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பாஜகவில் 2 எல்.எல்.ஏ விக்கெட் அவுட்? திமுக எம்.பி. சொல்வது யாரை?