தொடர்புடைய செய்திகள்
- புதிய டிஜிபி பதவியேற்பு.. ஸ்டாலின் மாதக்கணக்கில் செய்ய தவறியதை 20 நாளில் செய்து முடித்த முதல்வர் விஜய்...!
- பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை!.. டெல்லியில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
- போலீஸை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்!.. என்னா மனுஷன்!..
- கோவை சிறுமி கொலை!.. 2 பேர் கைது!.. தப்பிஓடிய நபர் மருத்துவமனையில் அனுமதி!..
- தவெக பெண் நிர்வாகிகள் பற்றி ஆபாச பேச்சு!.. பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு!...
கர்நாடகாவில் பதுங்கியிருந்த செய்தியாளர் முக்தார் கைது!.. தமிழக போலீசார் அதிரடி!..
செய்தியாளர் என்கிற பேரில் பேட்டி கொடுக்க வந்தவர்களிடன் சொந்த விஷயத்தை கூட கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேள்விகளாக கேட்டு முகம் சுளிக்க வைப்பவர்தான் முக்தார். இவரிடம் பேட்டிக்கு போன பல பிரபலங்களும் கசப்பான அனுபவத்தையே சந்தித்தார்கள்.
சில நாட்களுக்கு முன்பு பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவை முக்தார் பேட்டி எடுத்தார். அப்போது தமிழக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருக்கும் அலிசா அப்துல்லா பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளால் இருவரும் விமர்சித்தனர்..
அலிஷா அப்துல்லா தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அலிசாவின் இரண்டு குழந்தைகளில் ஒன்று அண்ணாமலையை போலவே இருக்கிறது என்று முத்தாரும், திருச்சி சிவாவும் மிகவும் மோசமாக பேசினார்கள்.
இதையடுத்து கண்ணீர் மல்க அலிசா அப்துல்லா காவல் ஆணையைடம் புகார் அளித்தார். எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் முக்தார் தலைமறைவானார். கடந்த சில நாட்களாகவே தமிழக போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் பதுங்கியிருந்த முத்தாரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
