1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police action against senthil balaji and ashok kumar

தலைமறைவான செந்தில் பாலாஜி!. தேடுதல் வேட்டையில் காவல்துறை!.. அடுத்து என்ன?...

senthil balaji
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்.,எல்.ஏக்களிடம் பல கோடிகள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிது. ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சிலர் ரூ.35 கோடி பேரம் பேசியதால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்..

இது தொடர்பாக திருநாவுக்கரசு என்பவர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கைதானவர்கள் அனைவரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்களின் சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சொன்னதின் பேரில்தான் தவெக எம்.எல்.ஏவிடம் பேசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்..

இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். ஜூலை 6ம் தேதியான நேற்று காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் நேற்று அவர்கள் ஆஜராகவில்லை..

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக போலீசார் ஆலோசனை செய்து வருகிறார்கள். ஏற்கனவே அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பி செல்ல விடாமல் தடுப்பதற்காக அனைத்து விமானங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக அவர்களை தேடும் பணியை தீவிர படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் போலீசார் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..