1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (18:02 IST)

ஜூலை 31 ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து!

ஜூலை 31ஆம் தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
 
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.