தொடர்புடைய செய்திகள்
- அண்ணா பல்கலை மாணவி மீதே பழி சுமத்தும் உணர்ச்சியற்ற எப்.ஐ.ஆர்.. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!
- 12 வயது, 14 வயது, 16 வயது சிறுமிகளுடன் காதல்.. சென்னை சிறுவன் உள்பட மூவர் கைது..
- பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை! உடனடி ஒப்புதல் கொடுத்த ஆளுநர்!
- 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!
- பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!
11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 அரசுப்பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது!
ஓசூரில் 11 வயது சிறுமிக்கு மூன்று அரசு பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்றும், குறிப்பாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிக அளவில் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓசூரில் 11 வயது சிறுமி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த சிறுமி தெருவில் தன்னுடைய தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தண்ணீர் குடிப்பதற்காக தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மாணவர்கள் திடீரென அந்த வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியிடம் பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தல் செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து, சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்த நிலையில் அவருடைய பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மூன்று அரசு பள்ளி மாணவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் சிறுவர்கள் என்பதால், சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட தாகவும், அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
Edited by Siva
