தொடர்புடைய செய்திகள்
- 3 வயது குழந்தைக்கு எலிக்காய்ச்சல் சிகிச்சைக்கு பதிலாக தவறான சிகிச்சை- எடப்பாடி பழனிசாமி
- நடந்த உண்மையை நாடகம் என்று சொல்வதா? இதுதான் திராவிட மாடலா? - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!
- ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தது உண்மை.. திருநாவுக்கரசின் பழைய அறிக்கை வைரல்..!
- ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் தாக்குதல் நடந்தது உண்மைதான்: எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை; புதுவை ஆளுநர் தமிழிசை..!
ஜெயலலிதா தான் எனக்கு நன்றிக்கடன் பட்டவர்: திருநாவுக்கரசர்
நான் ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் படவில்லை, ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன் பட்டுள்ளார் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் எனக்கு தான் நன்றி கடன் பெற்றுள்ளார், நான் ஜெயலலிதாவை பலமுறை காப்பாற்றி உள்ளேன். என்னால் தான் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார். என்னால் தான் அவர் முதல்வரானார்.
நான் காப்பாற்றியதால் தான் ஜெயலலிதா முதலமைச்சராகவும் மற்றவர்கள் அமைச்சர்களாகவும் ஆகினர். எனவே எனக்கு ஜெயலலிதா நன்றியாக இருக்க வேண்டும், நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நன்மை செய்துள்ளேன். ஆனால் எனக்கு அவர் நிறைய கெடுதல் தான் செய்தி உள்ளார், அவர் இறந்து விட்டதால் அது முடிந்து போன விஷயமாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.
Edited by Siva
