தொடர்புடைய செய்திகள்
- மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.. திருமாவளவன்
- விஜய்யுடன் கூட்டணியா? எனக்கு தெரியாது என்று பதிலளித்த திருமாவளவன்.. மாறுகிறதா கூட்டணி?
- 6 மாசத்துல ஆதவ் மனம் மாறுவாரா? இல்ல திருமா அணி மாறுவாரா? - தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி
- திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை: முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி..!
- திமுகவை அட்டாக் செய்த ஆதவ் அர்ஜுனா! கட்சியை விட்டு நீக்கிய திருமா! - அரசியல் களத்தில் பரபரப்பு!
ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை.. திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக விழாவில் ஆதவ் அர்ஜுன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று திடீரென ஆதவ் அர்ஜுன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன், "ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது; உடனே எதையும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு உள்ளது. ஆனால், அவர் என்ன நினைத்தாலும், அது கட்சிக்குள் சொல்லி, கட்சியின் குரலாக ஒலிக்க வேண்டும். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை," என்று தெரிவித்தார்.
மேலும், "ஆதவ் வெளியிட்ட அறிக்கை கட்சிக்கு எதிராக இருந்தது. இடைநீக்கம் செய்த அன்று அவர் வெளியிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று கூறினார்.
"தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தான் இந்த கட்சியில் இணைந்தேன்," என்று ஆதவ் முன்னதாக வெல்லும் ஜனநாயக மாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அதன்பின் அவரது நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை," என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
Edited by Siva
