1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TASMAC announce cashback offer in Nilgris

காலி மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 டிஸ்கவுண்ட்! – டாஸ்மாக் எடுத்த முடிவு!

Tamilnadu
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை அளித்தால் விலை சலுகை என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மது வாங்கி குடிக்கும் பலர் பாட்டில்களை காட்டு பகுதிகளில் வீசுவதால் வன உயிரினங்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது.

மதுப்பாட்டில்களை காட்டில் வீசுவதை குறைக்கும் விதமாக நீலகிரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி காலி மதுப்பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளிலேயே ஒப்படைத்தால் பாட்டிலுக்கு ரூ.10 பணம் வழங்கப்படும் அல்லது வாங்கும் புதிய மதுபாட்டிலில் ரூ.10 சலுகை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் காட்டின் சுற்றுசூழல் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
2 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!