1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 மார்ச் 2021 (11:23 IST)

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தென் கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.