தொடர்புடைய செய்திகள்
- ’’ஏன் கட்சிதொடங்கவில்லை???’’ ரஜினி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்...இணையதளத்தில் வைரல்
- திமுக பிரமுகர் கொலை; அதிமுகவினர் உள்ளிட்ட 10 பேர் கைது! – புதுக்கோட்டையில் பரபரப்பு!
- எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சூப்பர்… .மக்கள் மகிழ்ச்சி - நடிகை குஷ்பு பாராட்டு
- பெண்களை அவமதித்தது நாங்களா? நீங்களா? – எய்ம்ஸ் குழுவால் புதிய சர்ச்சை!
- தொடங்கியது வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
என்ன.. பாஸ் ஆகலையா?- தனித்தேர்வு முடிவுகளால் மாணவர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் டுடோரியல் மூலமாக எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடந்தது.
இந்நிலையில் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் மாணவர்கள் எழுதிய நிலையில் வெறும் 8 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 40 ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்ற 12ம் வகுப்பு தனித்தேர்விலும் 12% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
