செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (15:11 IST)

திமுக பிரமுகர் கொலை; அதிமுகவினர் உள்ளிட்ட 10 பேர் கைது! – புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவினர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் திமுக நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தோட்டத்தில் மாட்டு பண்ணையில் பூஜை செய்து கொண்டிருந்த பாலச்சந்திரனை மர்ம நபர்கள் துரத்தி வெட்டிக் கொன்றுள்ளனர். இதில் பாலச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளாக அதிமுவை சேர்ந்த பாலமுத்து, முருகானந்தம், நந்தக்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாலச்சந்திரனுக்கு பழக்கமானவர்கள் என கூறப்படுவதால் இது தனிப்பட்ட மோதல்கள் காரணமாக நடந்த கொலையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.