ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (07:55 IST)

சசிகலா ரிசார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை தீயிட்டு கொளுத்திய கன்னட அமைப்புகள்!

சசிகலா ரிசார்ட் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை தீ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் இன்று பெங்களூரில் இருந்து அவர் சென்னை கிளம்புகிறார். இதனை அடுத்து அவர் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் இருந்து கர்நாடக எல்லை வரையிலும் கர்நாடக எல்லையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் அமமுகவினர் பேனர்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சசிகலா தங்கியிருந்த ரிசார்ட் அருகே தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்புகள் திடீரென தீயிட்டுக் கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சசிகலா மீது எந்தவித கோபமும் இல்லை என்றும் ஆனால் தமிழில் அதிக அளவு பேனர்கள் வைத்ததால் எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதற்காக பேனர்களை தீயிட்டுக் கொளுத்தினோம் என்று கன்னட அமைப்புகள் விளக்கம் அளித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது