தொடர்புடைய செய்திகள்
- வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு
- சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
- IRCTC இணையதளம் சரி செய்யப்படும் வரை இதை செய்யுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!
- முடங்கியது IRCTC இணையதளம்: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி..!
- அக்காவின் மரணத்தில் குத்தாட்டம் போட்ட தங்கை....
தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் இந்த இரண்டு ஊர்களில் இனி நிற்காது: பயணிகள் ஏமாற்றம்
தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய நகரங்களில் நிற்காது என்பதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரதமர் மோடி தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் தொடங்கி வைத்த நிலையில் இந்த ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் தினமும் இரவு 9 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்புகிறது.
இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பி விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, தென்காசி வழியாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டையை அடையும்.
அதேபோல் மறுமார்க்கமாக திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
இந்த ரயில் சிவகங்கையில் நிற்காது என்றும் மானாமதுரையில் கிராசிங்கிற்காக மட்டுமே நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ள.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் மட்டுமே இந்த ரயில் நிற்கும் நிலையில் மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நகரங்களில் நிற்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
