புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (09:33 IST)

ஸ்டெர்லைட் வழக்கு: இறுதீர்ப்பை வழங்கும் உச்சநீதிமன்றம்!!!

ஸ்டெர்லைட் வழக்கு: இறுதீர்ப்பை வழங்கும் உச்சநீதிமன்றம்!!!
ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்திருக்கும் நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.
 
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
ஸ்டெர்லைட் வழக்கு: இறுதீர்ப்பை வழங்கும் உச்சநீதிமன்றம்!!!
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஸ்டெர்லைட் வழக்கு: இறுதீர்ப்பை வழங்கும் உச்சநீதிமன்றம்!!!
 
இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்று வந்தது. இரு தரப்பின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.