1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Students should read all subjects for public exam

அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்: தேர்வுத்துறை புது அறிவிப்பு!

மாணவர்கள்
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பு.  

 
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில் பொதுத்தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளன.
 
அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்குகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும். குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஆனால் அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்வி வரும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது.  
About Writer
Sugapriya Prakash