மொபைல்கேம் பாஸ்வேர்டு தராததால் மாணவனை கொலை செய்த நண்பர்கள்: அதிர்ச்சி சம்பவம்..!
மொபைல் கேம் பாஸ்வேர்டு தராததால் நான்கு நண்பர்கள் ஒரு மாணவனை கொலை செய்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் பாப்பை தாஸ் என்ற 18 வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் தனது சக நண்பர்களுக்கு மொபைல் பாஸ்வேர்டை பகிரவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு நண்பர்கள் பாப்பை தாஸ் என்ற மாணவனை கொலை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து நான்கு நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆன்லைன் மொபைல் கேம் விளையாடுவதற்கு பாஸ்வேர்டை பகிரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக பத்தாம் வகுப்பு மாணவனை அவரது சக மாணவர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva