1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (20:07 IST)

7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு வருகை புரிந்த சசிகலா

Sasikala
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகை புரிந்தார்.

இன்று கொடநாடு எஸ்டேட்டில் தங்கும் சசிகலா, நாளை  அந்த பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

இந்த பூஜையைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரும் கோட நாடு சென்றனர். அதன்பின்னர், 2017- ஆம் ஆண்டு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடந்த பிறகு சசிகலா இங்கு வரவில்லை.

எனவே 7 ஆண்டுகளுப்பின் சசிகலா கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்திலும், அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.