தொடர்புடைய செய்திகள்
- மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் டூவீலர் பறிமுதல்.. மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை..!
- ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
- இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா கோலி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
- பிருத்விராஜுடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!
- கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகுதா? அதிருப்தியில் சூர்யா ரசிகர்கள்!
தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை: கடலூரில் சோகம்
கடலூர் திட்டக்குடியில், தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலைசெய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலர் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்
இந்த நிலையில் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கவனம் ஈர்த்த கோபிகிருஷ்ணன் நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சிலர் அவரை தாக்கியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Mahendran
