தொடர்புடைய செய்திகள்
- லண்டன் சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவது எப்போது? பாஜக வட்டார தகவல்..!
- உலகின் மிகச்சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியல்.. ஒரு இந்திய பல்கலை கூட இல்லையா?
- சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!
- சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!
பணம் கேட்கிறார்கள்.. பட்டமளிப்பு விழாவின்போது கவர்னரிடம் புகார் அளித்த மாணவர்..!
பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் தங்களிடம் பணம் கேட்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்யச் சொல்வதாகவும், பட்டமளிப்பு விழாவில் கவர்னரிடம் ஒரு மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெறும் பிரகாஷ் என்ற மாணவர் மேடைக்கு வந்தபோது, கவர்னரிடம் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்தார்.
தனக்கு வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை பேராசிரியர்கள் செய்யச் சொல்கிறார்கள் என்றும், இந்த முறைகேடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக நிர்வாகம் குறித்து மாணவர் ஒருவர் கவர்னரிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
