தொடர்புடைய செய்திகள்
- சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட சிவசங்கர் பாபா! தொடங்கியது விசாரணை!
- சிக்கலில் ரவுடி பேபி சூர்யா, ஜிபி முத்து… சேனல் முடக்கம்??
- தந்தை கடனுக்காக மகனின் வங்கிக்கணக்கு முடக்கம்: பரிதாபமாக பலியான உயிர்!
- மத்திய அமைச்சரின் டுவிட்டர் பக்கம் முடக்கம்: பெரும் பரபரப்பு
- சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை வட்டாரத்தகவல்!
சிவசங்கர் பாபாவின் இ-மெயிலை முடக்கியது சிபிசிஐடி!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக இன்று சிவசங்கர் பாபாவுடன் சென்று அப்பள்ளியை சோதனை செய்த போலீசார் பென் ட்ரைவ், லேப்டாப் உள்பட பல முக்கிய பொருட்களை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான ஆதாரங்கள் சிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய யாஹூ இமெயிலை தற்போது போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் அந்த மெயிலில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் சாட் செய்த ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
சிபிசிஐடி போலீஸார் பாபாவின் இமெயிலை முடக்கியதை அடுத்து அந்த மெயிலில் உள்ள விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
