தொடர்புடைய செய்திகள்
- சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு: 5வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி..!
- தாமாக முன்வந்து எடுத்த அமைச்சர் பொன்முடி வழக்கு.. வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை..!
- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட பிறப்பித்த உத்தரவு: ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
- செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
- உதயநிதி மீது சுப்ரீம் கோர்ட் தானாக வழக்கு தொடர வேண்டும்: ஓய்வு பெற்ற 262 நீதிபதிகள் கடிதம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு: நீதிபதி அல்லி அனுமதி..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய நீதிபதி அல்லி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை முதன்மை நீதிமன்றமும், சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றமும் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றம் தான் ஜாமின் மனுவை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
