தொடர்புடைய செய்திகள்
- மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோர் கைது! அதிரடி உத்தரவு..!
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28 வரை காவல் நீட்டிப்பு.. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!
- அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்..!
- ''சிறை தண்டனை விதித்தால் உள்ளே போகிறேன்'' -புளூ சட்டை மாறன் டுவீட்
- போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 97 ஆண்டுகள் சிறைத் தண்டனை- நீதிமன்றம் அதிரடி
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு.. இன்று நேரில் ஆஜராகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அவர் எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இதனை அடுத்து அவருக்கு உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் குணமாகிய உடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவருடைய வழக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
