தொடர்புடைய செய்திகள்
- கோவையை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்?
- இந்திய ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு.. 17 வயது பெண்ணுக்கு பாலியல் கொடுமை..!
- இந்து முன்னணியை பார்த்து போலீசாரே அஞ்சும் நிலை..! ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.!! நீதிமன்றம் கருத்து..!!
- ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு! – சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!
- அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்.. என்ன காரணம்?
அமைச்சர் செந்தில் பாலாஜி மனு: பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு..!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவின் பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் 6 மாதங்களுக்கும் மேலாக சென்னைபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்த 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தரப்பு வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 15ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
