இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 13 பள்ளிகள் மூடப்படுகிறதா? அதில் பாதிக்கும் மேல் எந்த மாநிலத்தில்?
கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய UDISE+ அறிக்கையின்படி, 2025-26 கல்வியாண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தினமும் 13 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,426 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தெலங்கானா (1,392), மேற்கு வங்காளம் (568), ஆந்திரப் பிரதேசம் (474) மற்றும் தமிழ்நாடு (369) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை 14,71,473-லிருந்து 14,66,682-ஆக குறைந்துள்ளது. இருப்பினும், பீகார், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் புதிய பள்ளிகளை திறந்திருந்தாலும், அங்கு மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக, பீகாரில் 4.37 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மறுபுறம், மாணவர்கள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை முதல்முறையாக குறைந்துள்ளது. இது 7,993-லிருந்து 5,663-ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இன்றும் நாடு முழுவதும் இத்தகைய பள்ளிகளில் 20,667 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
குறிப்பாக, மேற்கு வங்காளத்தில் மட்டும் மாணவர்கள் இல்லாத 4,133 பள்ளிகளில் 19,502 ஆசிரியர்கள் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் பள்ளிகள் மூடல் கல்வித்துறையில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
Edited by Siva
