தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜியின் முக்கிய பொறுப்பை முத்துசாமியிடம் ஒப்படைத்த முதல்வர்..!
- அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: இன்று 3வது நீதிபதி விசாரணை..!
- டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு!
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நாளை பட்டியலிட உத்தரவு..!
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் வெளியான தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு விதமாக தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அவர்களுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நாளை பட்டியலிட மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லாவிட்டால் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதியான சிவி கார்த்திகேயன் அவர்களது தீர்ப்பு முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
Edited by Siva
