1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Senthil Balaji case go to third judge

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: இன்று 3வது நீதிபதி விசாரணை..!

Senthil Balaji
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆடகொணர்வு மனு விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையில் இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
 
இதனை அடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியான சி.வி கார்த்திகேயன் அவர்களுக்கு அனுப்பினார்.
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவை இன்று மூன்றாவது நீதிபதி விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கனவே முன்வைத்த வாதத்தை மட்டுமே வைக்க முடியும் என்றும் புதிய வாதத்தை வைக்க முடியாது என்றும் இதன் பிறகு மூன்றாவது நீதிபதி இரு நீதிபதிகளின் தீர்ப்பை பரிசீலனை செய்து தனது தீர்ப்பை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் களத்தில் இறங்கியது மெட்டாவின் Threads.. டிவிட்டருக்கு பாதிப்பு ஏற்படுமா?