வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (17:47 IST)

செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்..

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.