1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Senthil Balaji answer to BJP annamalai

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
மின் துறையில் ஊழல் நடந்ததாக ஆதாரத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள செந்தில்பாலாஜி இந்த பதிலை ஏற்றுக் கொண்டு அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது
 
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை’ இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
முதல்முறையாக 100 ரூபாயை தாண்டிய டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!