1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 அக்டோபர் 2021 (17:36 IST)

நேற்று அண்ணாமலை, இன்று ஸ்டாலின்: ஆளுனரை அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு!

நேற்று அண்ணாமலை, இன்று ஸ்டாலின்: ஆளுனரை அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு!
 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் ஆளுநர் கே.என்ரவி அவர்களை சந்தித்து உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் ஆளுநராக கே.என்ரவி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்ற நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆளுநரை சந்தித்தார் 
 
இந்த சந்திப்பின் போது திமுக எம்பி ரமேஷ் அவர்கள் கொலை வழக்கில் ஈடுபட்டதை அடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை மனு கொடுத்தார் 
இந்த நிலையில் சற்று முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் கே.என்ரவி அவர்களை சந்தித்தார். நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து ஏகே ராஜன் அவர்களின் அறிக்கையையும் அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார் 
 
அண்ணாமலை மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.