1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman thrashes Rajinikanth in by election campaign

சீமானுக்கு ரஜினி மேல அப்படி என்ன காண்டு? போர இடத்துலலாம் கிழிக்கிறாரூ...

சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டுள்ளார் சீமான்.  
 
தனது பிரச்சாரத்தின் போது நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் ஈடுப்பட்ட விக்கிரவாண்டி பிரச்சாரத்தின் போதும் ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சீமான் கூறியதாவது,  
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என சினிமாவில் கூறலாம், ஆனால், இங்கு அரசியலில் ஒவ்வொன்றையும் நூறு முறை சொல்ல வேண்டும். 
 
இதுவரை பல வேஷங்களை பார்த்துவிட்டோம், இன்னொருத்தர் வர இருக்கிறார், அதையும் நாங்கள் பார்ப்போம். ஆனால், என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடியின் உறவுக்கார பெண்ணிடம் கொள்ளை!: டெல்லியில் பரபரப்பு