1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman speech creates controversy again among public

எனக்கு ஓட்டு போடலனா செத்துருவ... சைகிள் கேப்பில் சாபம் விட்ட சீமான்!

சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எனக்கு வாக்களிக்களித்தால் வாழ்வீர்கள் இல்லையென்றால் செத்து போவீர்கள் என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்த நாள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்வில் பேசிய சீமான் பின்வருமாறு பேசினார்...
 
முதலில் நாட்டை யார் விற்பது என்பதில் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மேலும் ரஜினிகாந்தை ஹலைவர் என்றும் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் கூறும் நிலையில் தான் தமிழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். 
 
அதோடு தற்போது உள்ள சூழ்நிலையில் எனக்கு வாக்கு அளித்தால் வாழ்வீர்கள், இல்லை என்றால் செத்து தான் போவீர்கள் என பேசியுள்ளார். சீமானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
படிப்பு, வயது தேவையில்லை: தினமும் ரூ.2000 சம்பளத்தில் வேலை: குவியும் இளைஞர்கள்