1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman says Tamil Nadu will have 5 capitals

தமிழகத்திற்கு ஐந்து தலைநகரங்கள் - சீமான் !

seeman
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல். 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி அளித்தார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 4.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி !