1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman's Controversial Speech on 'Cows Forgetting Their Horns'

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

சீமான்
தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீசாரின் தடையை மீறி ஆடு மாடுகளை மேய்த்து ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
சீமான் தனது உரையில், "இலங்கையில் எங்களை குண்டு போட்டு கொன்றார்கள், அது இனப்படுகொலை. ஆனால், இங்கு குடிக்க வைத்து கொல்கிறார்கள், இதுவும் ஒரு இனப்படுகொலைதான்," என்று குற்றம் சாட்டினார்.
 
மேலும், "நாட்டை என்னிடம் ஒப்படைத்தால், ஐந்து ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன். அதற்கான திட்டங்களும், சிந்தனைகளும் என்னிடம் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆடு மாடுகளை மேய்ப்பது தொழில் மட்டுமல்ல, அது எங்கள் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மற்றும் பண்பாடு என்று கூறிய சீமான், "மாட்டுப்பொங்கல் கொண்டாடிய பரம்பரை நாங்கள். மாடுகளுக்கு போராடத் தெரியவில்லை. அவை கொம்புகள் இருப்பதை மறந்து,  வண்டியை இழுத்துக்கொண்டிருக்கின்றன என்று ஆவேசமாகப் பேசினார். அவரது இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!