தொடர்புடைய செய்திகள்
- ஒரு கவுன்சிலர் பதவிக்கு இத்தனை போட்டியா? – தருமபுரியில் பரபரப்பு!
- 1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
- எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரத்து இல்லை! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக..! – வாழ்க்கையை இழந்த பெண்!
- அடுத்த முதல்வர் விஜய்தான்..! – வேட்புமனு தாக்கல் செய்து ரசிகர்கள் முழக்கம்!
தற்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போதைக்கு 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கபடாமல் இருந்து வந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ”பள்ளிகள் திறப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இப்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
