திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (12:45 IST)

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான தடை

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான தடை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
இந்நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.