தொடர்புடைய செய்திகள்
- பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா! - கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பெற்றோர்கள் நெகிழ்ச்சி
- தமிழகத்தில் தேர்தல் வருவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா? அமைச்சர் முக்கிய தகவல்..!
- பி.எட். மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!
- GATE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு திடீர் ஒத்திவைப்பு..! என்ன காரணம்?
- கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்
இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
திருவள்ளூர் மாவட்டத்தில், இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி படிப்புகளை பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டிற்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறலாம். இந்த உதவித்தொகை மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையால் வழங்கப்படுகிறது.
தகுதிகள்: அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் அல்லது தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயில்வோர்.
இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக் போன்ற தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். (அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்போருக்கு வருமான உச்சவரம்பு இல்லை.)
மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, https://umis.tn.gov.in என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.
Edited by Mahendran
