தொடர்புடைய செய்திகள்
- உடைந்தது கோரம்பள்ளம் குளக்கரை! ஊருக்குள் செல்லும் வெள்ளம்! – அதிர்ச்சி வீடியோ!
- தென் மாவட்டங்களுக்கு 8 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு.. 2 பெண் வீராங்கனைகளும் வருகை..!
- தாமிரபரணி ஆற்றில் 45,000 கன அடி நீர் வெளியேற்றம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!
- 1871ம் ஆண்டுக்கு பிறகு பெய்த கனமழை.. நெல்லையப்பர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்..!
- தாமிரபரணி வெள்ள நீரை வறண்ட நிலங்களில் திருப்பி விடுங்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
விடிய விடிய பெய்த கனமழையால் சதுரகிரியில் வெள்ளம்: பக்தர்களை கயிறு மூலம் மீட்ட மீட்புப்படை..!
கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகி உள்ளன. தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல பொது மக்கள் பாதுகாப்பாக மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விருதுநகரில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக சதுரகிரியின் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்களை தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வனத்துறையினர், மீட்பு படையினர் கயிறு மூலம் கட்டி மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மிகவும் பாதுகாப்பாக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரலாறு காணாத மழையால் விருதுநகர் மாவட்ட எல்லிங்க நாயக்கன்பட்டி செங்கோட்டை கிராமங்களுக்கிடையிலான தரை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு உள்ள நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva
