தொடர்புடைய செய்திகள்
- கனவில் தோன்றிய அசரீரி… மருமகளுக்காக உயிரை விட்ட மாமியார்!
- மாணவி சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலையா? அதிர்ச்சி தகவல்!
- ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு!
- காதலித்து ஏமாற்றிய ஆசிரியை.. பள்ளி மாணவன் தற்கொலை! – வழக்கில் திடீர் திருப்பம்!
- சாதி சான்றிதழ் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் தற்கொலை செய்ய திட்டமா? அதிர்ச்சி தகவல்!
கல்லூரி மாணவி சத்யாவை இரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை அவரது காதலர் சதீஷ் ரயில் மீது தள்ளி கொலை செய்தார். இதனை அடுத்து அவர் தலைமறைவான நிலையில் நேற்றிரவு அவர் பிடிபட்டார்
இந்த நிலையில் விடிய விடிய நேற்று சதீஷிடம் நடத்திய விசாரணையில் ரயில் நிலையத்தில் சத்யாவை தள்ளி கொலை செய்த பின்னர் தானும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய திட்டமிட்டேன் என்றும் ஆனால் பயணிகள் என்னை பிடிக்க வந்ததால்தான் அங்கிருந்து தப்பி விட்டேன் என்றும் கூறியிருந்தார்
ஐந்து ஆண்டுகளாக நாங்கள் உருகி உருகி உருகிக்காதலித்தோம் என்றும், பெற்றோர் எதிர்ப்பால் தான் எங்களது காதலை முறித்துக் கொண்டார் என்றும் கட்டாயப்படுத்தி பேச முயற்சித்த போது ஏற்பட்ட தகராறில் ரயில் முன் சத்யாவை தள்ளி விட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
