தொடர்புடைய செய்திகள்
- அதிமுக - திமுக வாக்குவாதம்- வாக்குசாவடியை விட்டு வெளியேற்றம்!
- துரைமுருகனே யார் துரோகி? அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு
- கட்சிகளின் தேர்தல் செலவு விவரம்...திமுக முதலிடம் !
- நீங்க சீட்டு தரலைன்னா சுயேட்சையா நிற்போம்; அதிமுகவில் பூசல்! – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!
- டிஸ்சார்ஜ் ஆனதும் கொடநாடு போக ஆடர் போட்ட ஜெ.: சசி திடுக்கிடும் தகவல்!
வரும் 17 ஆம் தேதி சசிகலா வைத்துள்ள மெகா திட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சிறையில் இருந்து வந்த பின்னர் முதல் முறையாக செல்ல உள்ளார் சசிகலா.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு, அதிமுகவின் 50 வது ஆண்டு தொடக்க விழா வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் சசிகலா.
சிறையில் இருந்து வந்ததும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா பொதுவெளியில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்முறையாக செல்கிறார்.
இதன் பின்னர் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
