தொடர்புடைய செய்திகள்
- துரைமுருகனே யார் துரோகி? அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு
- பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்! – அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!
- கட்சிகளின் தேர்தல் செலவு விவரம்...திமுக முதலிடம் !
- நீங்க சீட்டு தரலைன்னா சுயேட்சையா நிற்போம்; அதிமுகவில் பூசல்! – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!
- உள்ளாட்சியிலும் நல்லாட்சி வேண்டுமா? ஸ்டாலின் சொல்வது என்ன?
அதிமுக - திமுக வாக்குவாதம்- வாக்குசாவடியை விட்டு வெளியேற்றம்!
சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்னங்கள் வெளியே தெரிவதாக கூறி அதிமுகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்குச்சாவடி வழியாக சென்ற திமுகவினர், அதிமுகவினர் வாக்குவாதம் செய்வதை பார்த்து வாக்குவாதம் செய்த அதிமுகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரையும் பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.
அடுத்த கட்டுரையில்
