1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sasikala announce her new party

புதிய கட்சியை துவங்கிய சசிகலா!. கட்சியின் பெயர்.. சின்னம் இதுதான்!...

vk sasikala
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா இருந்தவரை போயஸ்கார்னில் முக்கிய நபராக இருந்தார்.. அதிமுக அமைச்சர்கள் இவர் இவரின் வழியாகத்தான் ஜெயலலிதாவை சந்திப்பார்கள்.அதனால்தான் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் ‘நீங்கள்தான் கட்சிக்கு தலைமை பொறுப்பேற்று வழிநடத்த வேண்டும்’ என அத்தனை அதிமுக அமைச்சர்களும் சசிகலாவின் காலில் விழுந்தார்கள்.. அதை ஏற்றுக்கொண்டு அவரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக மாறினார்..

அடுத்து முதல்வராக திட்டமிட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார்
. ஆனால் அவர் விடுதலையான போது அதிமுக பழனிச்சாமியின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அதோடு டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சிக்குள் சேர்க்க அவர் அனுமதிக்கவில்லை..

இந்நிலையில்தான், தற்போது புதிய அரசியல்கட்சியை சசிகலா துவங்கியிருக்கிறார்.. கருப்பு வெள்ளை சிவப்பு நிறம் கொடுக்க கொடியின் நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்த கட்சிக்கு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.. கட்சியின் பெயர் மற்றும் இரண்டையும் சசிகலா தற்போது அறிமுகம் செய்திருக்கிறார். மேலும் தனது கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்..

எனவேதான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.. மேலும் ஒரே கருத்துள்ள கட்சியுடன் கூட்டணி அமைப்போம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்..