1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sarathkumar and Radhika got prison punishment in couert

காசோலை மோசடி; சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை!

Tamilnadu
காசோலை மோசடி வழக்கில் சமக கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் காசோலை திரும்பிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 5 வழக்குகளில் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
களைக்கட்டிய புதுச்சேரி தேர்தல்! அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச ஓட்டு வீதம்?