1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:47 IST)

நாளை திறக்கப்படும் சபரிமலை கோவில்; பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

நாளை திறக்கப்படும் சபரிமலை கோவில்; பக்தர்களுக்கு அனுமதி எப்போது?
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்படும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாளை நவம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 16ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் நிலையில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.