1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sabareesan work in coimbatore for dmk candidate

அண்ணாமலையை ஜெயிக்க விடக்கூடாது..! கோவையில் களமிறங்கிய சபரீசன்..

கோவை தொகுதி
கோவை தொகுதியில் அண்ணாமலை ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக சபரிசன் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அவரை தோற்கடிக்க திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படுவதாக கூறப்பட்டு வருகிறது. 
இருப்பினும் பாஜக தொண்டர்கள் கோவை தொகுதி முழுவதும் துண்டு நோட்டீசுகளை கொடுத்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் அந்த அளவுக்கு திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவை தொகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக ஏற்கனவே அமைச்சர் சக்கரபாணி உள்ள நிலையில் தற்போது கூடுதலாக பூச்சி முருகன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி டிஆர்பி ராஜாவையும் பொறுப்பாளராக அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இருப்பினும் திமுகவினர் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டி வருவதால் களத்தில் தற்போது சபரீசன் இறங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து திமுக தொண்டர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
எப்படியும் அண்ணாமலையை ஜெயிக்க விடக்கூடாது என்று திமுக தீவிரமாக கோவையில் பிரச்சாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் - நீதிபதி