1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RS Bharathi says about income tax raid

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

திமுக
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.
 
சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகின்றது என்றும், எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
 
மேலும் சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்