1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Request to reopen schools in Tamil Nadu

ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு?

கொரோனா குறைவு
கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறலாம் என அரசு அறிவித்துள்ளது. 
 
முன்னதாக பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் இ - பதிவு, இ - பாஸ் முறை ரத்து !